மலையாள நடிகர் மம்மூட்டி மீது கேரள தொண்டு நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது. கேரளா உள்பட இந்தியா முழுவதும் இயங்கி வரும் தொண்டு நிறுவனம் ஒன்று பண மோசடியில் ஈடுபட்டதாக சமீபத்தில் கேரளாவில் செயல்படும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியானது.
இதுதொடர்பாக தொண்டு நிறுவன நிர்வாகி யோகன்னா என்பவர் அந்த தொலைக்காட்சியின் சேர்மனாக இருக்கும் நடிகர் மம்முட்டி மீது டெல்லி அடிசனல் சீப் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அங்கித், நடிகர் மம்முட்டி டிசம்பர் 22ம்தேதிக்குள் கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக தொண்டு நிறுவன நிர்வாகி யோகன்னா என்பவர் அந்த தொலைக்காட்சியின் சேர்மனாக இருக்கும் நடிகர் மம்முட்டி மீது டெல்லி அடிசனல் சீப் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அங்கித், நடிகர் மம்முட்டி டிசம்பர் 22ம்தேதிக்குள் கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.