காதல் மீது இன்னமும் நம்பிக்கை இருக்கிறது: நயன்தாரா

Eyestube
காதல் மீது இன்னமும் நம்பிக்கை இருக்கிறது: நயன்தாரா 09-nay10
சிம்பு, பிரபுதேவா ஆகியோருடனான காதல் தோல்வியில் முடிந்த பின்னரும் காதல் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாக நயன்தாரா தெரிவித்துள்ளார். எனக்கென்று ஒருவர் பிறந்திருக்கிறார் கடவுள் அவரை எனக்கு கொடுப்பார் என்றும் கூறியுள்ளார் நயன்தாரா.

நயன்தாராவுக்கும் காதல் கிசுகிசுவிற்கும் பஞ்சமே இருக்காது. சிம்பு உடன் கிசுகிசுக்கப்பட்ட நயன்தாரா திடீரென்று அவருடனான காதலை முறித்துக்கொண்டார். பின்னர் பிரபுதேவா உடன் காதல் உறுதியாகி திருமணம் வரை சென்றது. பிரபு தேவாவின் பெயரை தன் கையில் பச்சைக் குத்திக் கொண்டார். அவருக்காக மதம் மாறினார். ஆனால் அந்த காதலும் தோல்வியில் முடிந்தது.

சீதாவாக நடித்த படம் ராமராஜ்ஜியம் படம்தான் கடைசி படம் என்று அறிவித்திருந்த நிலையில் பிரபுதேவாவுடன் காதல் முறிந்ததையடுத்து மீண்டும் சினிமாவில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அஜீத்துடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த நயன்தாரா, காதல் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது என்று கூறியிருக்கிறார். எனக்கு கடவுள் எவ்வளவோ கொடுத்து உள்ளார். அன்பு, காதல், மீது எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. எனக்காக ஒருவர் பிறந்தே இருக்கிறார். அவரையும் கடவுள் எனக்கு கொடுப்பார் என்றார்.

நான் நடித்த ஒரு படம் தோல்வி அடைந்தால் அதற்காக வருத்தம் அடைவேன். அடுத்த படத்தில் அதனை திருத்திக் கொள்வேன். அதன் மூலம் வெற்றி பெறுவேன். அதுபோலத்தான் வாழ்க்கையிலும் எதிர்பார்த்த ஒன்று கிடைக்காவிட்டால் அதுபற்றி வருத்தப்படாமல் அதனை மறந்துவிட வேண்டும். கசப்பான அனுபவம்தான் நமக்கு கூடுதல் முன்னேற்றத்தை அளிக்கும்.
இன்றைய கசப்பான அனுபவம் நாளைய இனிப்பான நிகழ்வாக இருக்கும் என்று தத்துவமழை பொழிந்திருக்கிறார் நயன்தாரா.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!