அமிதாப் கையில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா?

Eyestube
அமிதாப் கையில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா? 11-ami10
மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தன் கையில் அழகிய பெண் குழந்தையை வைத்திருக்கும் படங்கள் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் இருக்கும் குழந்தை அவரது பேத்தி ஆராத்யா என்ற அவசர முடிவுக்கே அனைவரும் வருகின்றனர்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் என்பது நாங்கள் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. இன்று இணையதளத்தில் பிரவுஸ் செய்தபோது அமிதாப் பச்சன் தன் கையில் ரோஸ் கலர் கவுன் போட்ட குட்டிப் பாப்பாவை வைத்திருக்கும் போட்டோவைப் பார்த்தோம்.

அமிதாப்பும் சரி, அந்த பாப்பாவும் சரி சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோவுடன் கூடிய செய்தியைப் பார்த்ததும் இத்தனை மாதங்களாக மீடியாக்கள் கண்ணில் படாமல் வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராய், அபிஷேக்கின் மகள் ஆராத்யாவோ என்ற நினைத்துவிட்டோம். அடடா அமிதாப் இறுதியாக ஆராத்யாவை உலகிற்கு காட்டிவிட்டார் போலும் என்று நினைத்து அந்த செய்தியைப் படித்தபோது தான் அது வேறு ஒரு பாப்பா என்று தெரிய வந்தது.

குரோர்பதி நிகழ்ச்சியில் கோவையைச் சேர்ந்த வினீத் குமார் என்பவர் கலந்து கொண்டார். அவர் தனது மனைவி, 10 மாத மகள் குஷி ஆகியோரை அரங்கிற்கு அழைத்துச் சென்றார். நிகழ்ச்சியில் பிரேக் விட்டபோது வினீத் அமிதாபை பார்த்து சார், என் குழந்தையை கொஞ்சம் பார்க்க வருகிறீர்களா என்று கேட்க அவரும் குஷியை குஷியாக தூக்கி வைத்து கொஞ்சினார்.

அந்த குழந்தையும் அமிதாபிடம் அழாமல் சென்றுள்ளது. அதிர்ஷ்ட குழந்தை தான்....

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!