சென்னை: சாட்டை படத்தின் திருட்டு விசிடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் பிரபு சாலமன்.
இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த பிரபு சாலமன் இது தொடர்பாக புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அதில், நான் சாட்டை என்ற படத்தைத் தயாரித்துள்ளேன். அப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. ஆனால் அப்படத்தை சிலர் திருட்டு விசிடியாக தயாரித்து விற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் கோயம்பேட்டிலிருந்து செல்லும் ஆம்னி பஸ்களிலும் இதை காட்டுகின்றனர். இன்டர்நெட்டிலும் வெளியி்ட்டுள்ளனர். இதற்கு எதிராக நடவடிக்கை எடுத்து திருட்டு விசிடிக்காரர்களைக் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் பிரபு சாலமன்.
இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த பிரபு சாலமன் இது தொடர்பாக புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அதில், நான் சாட்டை என்ற படத்தைத் தயாரித்துள்ளேன். அப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. ஆனால் அப்படத்தை சிலர் திருட்டு விசிடியாக தயாரித்து விற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் கோயம்பேட்டிலிருந்து செல்லும் ஆம்னி பஸ்களிலும் இதை காட்டுகின்றனர். இன்டர்நெட்டிலும் வெளியி்ட்டுள்ளனர். இதற்கு எதிராக நடவடிக்கை எடுத்து திருட்டு விசிடிக்காரர்களைக் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் பிரபு சாலமன்.