உதவி இயக்குநராக இருந்த ராமகிருஷ்ணன். திடீரென குங்குமபூவும் கொஞ்சுபுறாவும் படத்தின் ஹீரோவானார். அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தும் நல்ல வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. கோரிப்பாளையம் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்தார்.
அதன்பிறகு தபு சங்கரின் 'வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
அதன் பிறகு என்ன காரணத்தாலோ அந்தப் படத்திலிருந்து விலக்கப்பட்டார். அதில் தற்போது அசோக் நடித்து வருகிறார். அடுத்த வாய்ப்புக்காக காத்திருந்த ராமகிருஷ்ணனுக்கு இப்போது சிறுவர் பூங்கா என்ற படத்தில் ஹீரோ வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சானியா தாரா என்ற மலையாளத்து தேவதை ஹீரோயின். கரு.பழனியப்பனின் உதவியாளர் பாலமுருகன் இயக்குகிறார். மாமானார், மாமியாரை தெய்வமாக மதித்து காப்பாற்றும் ஒரு மருமகனின் கதை. படத்தில் ஒரு சிறுவர் பூங்காவிற்கு முக்கியத்தும் இருக்கிறதாம். அதனால் படத்துக்கும் அப்படியே பெயர் வைத்துவிட்டார்களாம்.
அதன்பிறகு தபு சங்கரின் 'வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
அதன் பிறகு என்ன காரணத்தாலோ அந்தப் படத்திலிருந்து விலக்கப்பட்டார். அதில் தற்போது அசோக் நடித்து வருகிறார். அடுத்த வாய்ப்புக்காக காத்திருந்த ராமகிருஷ்ணனுக்கு இப்போது சிறுவர் பூங்கா என்ற படத்தில் ஹீரோ வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சானியா தாரா என்ற மலையாளத்து தேவதை ஹீரோயின். கரு.பழனியப்பனின் உதவியாளர் பாலமுருகன் இயக்குகிறார். மாமானார், மாமியாரை தெய்வமாக மதித்து காப்பாற்றும் ஒரு மருமகனின் கதை. படத்தில் ஒரு சிறுவர் பூங்காவிற்கு முக்கியத்தும் இருக்கிறதாம். அதனால் படத்துக்கும் அப்படியே பெயர் வைத்துவிட்டார்களாம்.