கூத்து என்ற பெயரில் உருவாகும் புதிய படத்தில் 7 கதாநாயகர்கள் இணைந்து நடிக்கிறார்கள். அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் 25 வருடங்களாக தனி ராஜ்யம் நடத்தி வருகிறான், ஒரு மாயாவி. போலீசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த அவனை தந்திரமாக பொறி வைத்து பிடித்து, சுட்டுக் கொல்கிறார்கள். அவனுடைய ரகசியங்களை அறிந்து கொள்வதற்காக, 7 பேர்களை கொண்ட ஒரு அதிரடிப்படை காட்டுக்குள் செல்கிறது. அந்த அதிரடிப்படை வீரர்களுக்கு ஏற்படும் அனுபவங்களே கதை.
கூத்து படத்தில் பிரசன்னா, விமல், ரிச்சர்ட், ஹரிஷ், பரணி, நிதிஷ், ஜெமினி பாலாஜி ஆகிய 7 பேர் ஹீரோக்களாகவும், அருந்ததி, நந்தகி ஆகிய இருவரும் ஹீரோயின்களாகவும் நடிக்கிறார்கள். ரெஹான் இசையமைக்கிறார். தினேஷ் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்ய, கதை - திரைக்கதை - வசனம் எழுதி இயக்குகிறார் பத்மா மகன். இவர், அம்முவாகிய நான் படத்தை இயக்கியவர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற இருக்கிறது.
கூத்து படத்தில் பிரசன்னா, விமல், ரிச்சர்ட், ஹரிஷ், பரணி, நிதிஷ், ஜெமினி பாலாஜி ஆகிய 7 பேர் ஹீரோக்களாகவும், அருந்ததி, நந்தகி ஆகிய இருவரும் ஹீரோயின்களாகவும் நடிக்கிறார்கள். ரெஹான் இசையமைக்கிறார். தினேஷ் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்ய, கதை - திரைக்கதை - வசனம் எழுதி இயக்குகிறார் பத்மா மகன். இவர், அம்முவாகிய நான் படத்தை இயக்கியவர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற இருக்கிறது.